தாயுமானவர்

நகுலா சிவநாதன்
தாயுமானவர்

தாயுமானவர் அப்பா தந்தையானவர்
சோதியானவர் அப்பா
சொந்தம் நீங்கள் தான் அப்பா
நீதியாவர் அப்பா நிச்சயம் ஆனவர்

சின்ன வயதில் எமை வளர்த்தவர்
சிங்காரக் கதை சொல்லி வளர்த்தவர்
அம்மா இல்லாவிட்டாலும்……
அரவணைத்து வளர்த்தவர்

செம்மை வாழ்வில் செழிக்க வைத்தவரே
உண்மை சொல்லி வாழ்ந்த உத்தமர்
தன்னம்பிக்கை தந்த எங்கள் அப்பா
தளராது அப்பா உந்தன் அன்பு

நகுலா சிவநாதன் 1810

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading