ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

அகவை இருபத்தியெட்டா…

வசந்தா ஜெகதீசன்
அவனியின் முதலீடே
அகவை இருபத்தியெட்டா புதைநிலத்து பொக்கிசமாய் பூத்திட்ட ஒருநாள்
தடைகளையே படிகளாக்கி தன்னம்பிக்கை பதித்தது
தமிழுக்கே மகுடமிட்டு முதலொலியாய் ஒலித்தது
உருவாக்கத்திறனிலே உலகெல்லாம் வியந்தது
நாளந்தம் வித்தகத்தை வெற்றியெனச் சுமந்தது
எழுத்தாளர் வாரமது மகுடமென பூத்தது
எண்ணற்ற சேவை வளம் ஏற்றமாய் மலர்ந்தது
உருவாக்கும் ஊடகமாய் உலகிலே மிளிர்ந்தது
கலைக்குடும்பம் வாழ்க்கையினை காணிக்கையாய் ஈர்ந்தது
காற்றலையின் கம்பீரம் பாமுகமாய் பிரசவம்
தாசப்பத்தின் தனிநிலவே தன்னம்பிக்கை பாமுகமே!
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading