வர்ண வர்ணப் பூக்களே..

வசந்தா ஜெகதீசன்
வர்ண வர்ணப் பூக்களே..
அழகு நிறைந்த அவதாரம்
அவனிக்கு வர்ணம் ஆதாரம்
எழிலில் மனதைக் கவருமே
எங்கும் பூக்கள் மலருமே
ஒற்றை நாளில் உயிர்வாழும்
ஓவ்வொரு செயலிலும் இணைவாகும்
மணமும் நிறமும் உரித்தாகும்
மலர்ச்சியில் மகிழ்ச்சி நிறைவாகும்
பற்பல நிறத்தில் பூக்களே
பாரை நிறைக்கும் அழகில்
பார்ப்போர் மனதை திருடியே
பயணிக்கும் பூக்கள் பேரழகு
மருந்தாய், மலர்கொத்தாய் பூசை முதலாய் வாழ்வின் வரமாய்
என்றும் தனக்கெனத் தனித்துவமாய்
வர்ணஜாலம் தேவதையாய்
வாழ்வில் ஒன்றித்தே வாழ்வது
வர்ண வர்ணப் பூக்களாய்
காசினி எங்கும் எழிலோடு
மனதை மயக்கும் மலரினமே!
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading