ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

காலத்தின் பதில் என்னவோ??

நேவிஸ் பிலிப் கவி இல(469)

கடந்த காலம் நினைந்து
வரும் காலம் எதிர்பார்த்து
உளம் நொந்து வருந்தி
அவதிப் படும் நெஞ்சக்கு
ஆறுதல் ஏது

காலம் கடக்கிறது
முடிவுகள் தெரியாமலே
கற்பனையில் கோட்டை கட்டி
வாழ்கின்றோம் நிதமும்

என்று எது எப்போ
ஒன்றும் புரியாமலே
நாட்கள் நகர
காலங்கள் கரைய

நிம்மநி இழந்த நெஞ்சுடனே
வற்றாத கண்ணீருடன்
நகரும் நாட்களுடன்
நாமும் ஓடுகின்றோம்

அலை மோதும் மனதிற்கு
ஆறுதல் தேடுகின்றோம்
ஒரு கணமேனும் எமை நினைத்து
நல் பதில் கூறிடுவாய் காலமே!!

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading