கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

காலத்தின் பதில் என்னவோ??

நேவிஸ் பிலிப் கவி இல(469)

கடந்த காலம் நினைந்து
வரும் காலம் எதிர்பார்த்து
உளம் நொந்து வருந்தி
அவதிப் படும் நெஞ்சக்கு
ஆறுதல் ஏது

காலம் கடக்கிறது
முடிவுகள் தெரியாமலே
கற்பனையில் கோட்டை கட்டி
வாழ்கின்றோம் நிதமும்

என்று எது எப்போ
ஒன்றும் புரியாமலே
நாட்கள் நகர
காலங்கள் கரைய

நிம்மநி இழந்த நெஞ்சுடனே
வற்றாத கண்ணீருடன்
நகரும் நாட்களுடன்
நாமும் ஓடுகின்றோம்

அலை மோதும் மனதிற்கு
ஆறுதல் தேடுகின்றோம்
ஒரு கணமேனும் எமை நினைத்து
நல் பதில் கூறிடுவாய் காலமே!!

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading