சித்திரமே வாராயோ……..

இரா.விஜயகௌரி
அஞ்சு வண்ண சித்தரமே
அழகான பேரொளியே
குஞ்சு மகள் உன் வரவை
கூடி நின்று தேடுகின்றோம்

கருவறையில் உன் நடனம்
களித்திருந்து பேசுகின்றா்ய
ரசித்தெழுந்து உரசுகின்றாய்
கணங்களுக்கும் பொருள் நிறைத்தாய்

எதிர்பார்ப்பை விதைத்து விட்டு
காத்திருப்பில். எங்கள் உலா
கனவினிலே வாழ்வெழுதி
கண்மணியாய் வளருகின்றாய்

எங்கள் சித்திரத்து பொற்சுடரே
சீரெழுதும் கனிமொழியே
உற்சவத்தின் பெருந்தேரில்
உலவ வரும் தேவதையே

காத்திருந்து தேடுகின்றோம்
கண்மணியே. வாராயோ
மணிவயிற்றை விட்டகன்று
மலர்மடியில் கொஞ்சியெழ……..

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading