குதூகலம்

ஜெயம்

குதூகலாம்

பழைய குப்பைகளை மனதினுள் தேக்கி
நுழைந்து கவலைக்குள் வாழ்க்கையை ஆக்கி
தொலைத்தே மகிழ்ச்சியை காலத்தைப் போக்கி
பிழைக்கும் மாந்தர்க்கு வெறுமையே பாக்கி

அடைந்துவிட குதூகலம் ஊறிவிடும் புத்துணர்ச்சச்சி
இடைமறிக்கும் துன்பங்களை வாழ்க்கையின் நிகழ்ச்சி
புடைசூழ்ந்தால் துயரங்கள் இல்லையங்கு மீட்சி
விடைபெறாத சந்தோசத்தால் ஆரோக்கியத்தின் ஆட்சி

பணம் மகிழ்ச்சியை ஒருபோதும் நிர்ணயிப்பதில்லை
மனமொன்றே ஆனந்தத்தை உருவாக்கும் எல்லை
உணர்ந்துகொண்டால் உண்மையினை பீடிக்காது தொல்லை
கணங்களுக்குள் களிப்பவனே புன்னகையின் பிள்ளை

18-08-2025

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

Continue reading