நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

குதூகலம்

ஜெயம்

குதூகலாம்

பழைய குப்பைகளை மனதினுள் தேக்கி
நுழைந்து கவலைக்குள் வாழ்க்கையை ஆக்கி
தொலைத்தே மகிழ்ச்சியை காலத்தைப் போக்கி
பிழைக்கும் மாந்தர்க்கு வெறுமையே பாக்கி

அடைந்துவிட குதூகலம் ஊறிவிடும் புத்துணர்ச்சச்சி
இடைமறிக்கும் துன்பங்களை வாழ்க்கையின் நிகழ்ச்சி
புடைசூழ்ந்தால் துயரங்கள் இல்லையங்கு மீட்சி
விடைபெறாத சந்தோசத்தால் ஆரோக்கியத்தின் ஆட்சி

பணம் மகிழ்ச்சியை ஒருபோதும் நிர்ணயிப்பதில்லை
மனமொன்றே ஆனந்தத்தை உருவாக்கும் எல்லை
உணர்ந்துகொண்டால் உண்மையினை பீடிக்காது தொல்லை
கணங்களுக்குள் களிப்பவனே புன்னகையின் பிள்ளை

18-08-2025

Nada Mohan
Author: Nada Mohan