” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

குதூகலம்

ஜெயம்

குதூகலாம்

பழைய குப்பைகளை மனதினுள் தேக்கி
நுழைந்து கவலைக்குள் வாழ்க்கையை ஆக்கி
தொலைத்தே மகிழ்ச்சியை காலத்தைப் போக்கி
பிழைக்கும் மாந்தர்க்கு வெறுமையே பாக்கி

அடைந்துவிட குதூகலம் ஊறிவிடும் புத்துணர்ச்சச்சி
இடைமறிக்கும் துன்பங்களை வாழ்க்கையின் நிகழ்ச்சி
புடைசூழ்ந்தால் துயரங்கள் இல்லையங்கு மீட்சி
விடைபெறாத சந்தோசத்தால் ஆரோக்கியத்தின் ஆட்சி

பணம் மகிழ்ச்சியை ஒருபோதும் நிர்ணயிப்பதில்லை
மனமொன்றே ஆனந்தத்தை உருவாக்கும் எல்லை
உணர்ந்துகொண்டால் உண்மையினை பீடிக்காது தொல்லை
கணங்களுக்குள் களிப்பவனே புன்னகையின் பிள்ளை

18-08-2025

Nada Mohan
Author: Nada Mohan