மறக்கதுதான் முடியுமா 769 09.07.2026

செல்வி நித்தியானந்தன் மறக்கதுதான் முடியுமா திட்டமிட்ட கொலைகள் திரண்ட தமிழினத்தை தீக்கிரை யாக்கியும் தீத்துக் கட்டியதே கத்திகோடரி துப்பாக்கி கனத்த ஆயுதங்களாய் கொலை...

Continue reading

குதூகலம்

ஜெயம்

குதூகலாம்

பழைய குப்பைகளை மனதினுள் தேக்கி
நுழைந்து கவலைக்குள் வாழ்க்கையை ஆக்கி
தொலைத்தே மகிழ்ச்சியை காலத்தைப் போக்கி
பிழைக்கும் மாந்தர்க்கு வெறுமையே பாக்கி

அடைந்துவிட குதூகலம் ஊறிவிடும் புத்துணர்ச்சச்சி
இடைமறிக்கும் துன்பங்களை வாழ்க்கையின் நிகழ்ச்சி
புடைசூழ்ந்தால் துயரங்கள் இல்லையங்கு மீட்சி
விடைபெறாத சந்தோசத்தால் ஆரோக்கியத்தின் ஆட்சி

பணம் மகிழ்ச்சியை ஒருபோதும் நிர்ணயிப்பதில்லை
மனமொன்றே ஆனந்தத்தை உருவாக்கும் எல்லை
உணர்ந்துகொண்டால் உண்மையினை பீடிக்காது தொல்லை
கணங்களுக்குள் களிப்பவனே புன்னகையின் பிள்ளை

18-08-2025

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading