மறக்கதுதான் முடியுமா 769 09.07.2026

செல்வி நித்தியானந்தன் மறக்கதுதான் முடியுமா திட்டமிட்ட கொலைகள் திரண்ட தமிழினத்தை தீக்கிரை யாக்கியும் தீத்துக் கட்டியதே கத்திகோடரி துப்பாக்கி கனத்த ஆயுதங்களாய் கொலை...

Continue reading

குதூகலம்

ராணி சம்பந்தர்

எழும் சிந்தனையோ ஏராளம்
தழுவும் சொந்தம் தாராளம்
விழுதான பந்தமே தாய் மண்
முற்ற நிலவு வெளிச்சமதில்
கூடிக் கூழ் குடித்த இனிமை
மனம் நிறைவான குதூகலம்

பாழாய்ப்போன இனவெறியில்
நாளும் பொழுதும் கூடும் குஞ்சும்
சூளும் சுற்றமும் நாடு விட்டு நாடு
புலம்பெயரப் பிரிந்து நுழைந்திட்ட
அந்நிய கலாச்சாரச் சீர் கோலம்

அதி உயர் விலைவாசி அவசர உலகம்
சதி செய்யும் புதுப்புது போராட்டம்
பதி போடும் இரத்தக் கொலை வெறி
சுதி மேயும் சதிராட்டப் போதை நாறிட
கதி கலங்கி விதியோடு விளையாடிக்
கொப்பளிக்கும் குதூகலம் குதூகலம் .

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading