குதூகலம்

ராணி சம்பந்தர்

எழும் சிந்தனையோ ஏராளம்
தழுவும் சொந்தம் தாராளம்
விழுதான பந்தமே தாய் மண்
முற்ற நிலவு வெளிச்சமதில்
கூடிக் கூழ் குடித்த இனிமை
மனம் நிறைவான குதூகலம்

பாழாய்ப்போன இனவெறியில்
நாளும் பொழுதும் கூடும் குஞ்சும்
சூளும் சுற்றமும் நாடு விட்டு நாடு
புலம்பெயரப் பிரிந்து நுழைந்திட்ட
அந்நிய கலாச்சாரச் சீர் கோலம்

அதி உயர் விலைவாசி அவசர உலகம்
சதி செய்யும் புதுப்புது போராட்டம்
பதி போடும் இரத்தக் கொலை வெறி
சுதி மேயும் சதிராட்டப் போதை நாறிட
கதி கலங்கி விதியோடு விளையாடிக்
கொப்பளிக்கும் குதூகலம் குதூகலம் .

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

Continue reading