” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

குதூகலம்

ராணி சம்பந்தர்

எழும் சிந்தனையோ ஏராளம்
தழுவும் சொந்தம் தாராளம்
விழுதான பந்தமே தாய் மண்
முற்ற நிலவு வெளிச்சமதில்
கூடிக் கூழ் குடித்த இனிமை
மனம் நிறைவான குதூகலம்

பாழாய்ப்போன இனவெறியில்
நாளும் பொழுதும் கூடும் குஞ்சும்
சூளும் சுற்றமும் நாடு விட்டு நாடு
புலம்பெயரப் பிரிந்து நுழைந்திட்ட
அந்நிய கலாச்சாரச் சீர் கோலம்

அதி உயர் விலைவாசி அவசர உலகம்
சதி செய்யும் புதுப்புது போராட்டம்
பதி போடும் இரத்தக் கொலை வெறி
சுதி மேயும் சதிராட்டப் போதை நாறிட
கதி கலங்கி விதியோடு விளையாடிக்
கொப்பளிக்கும் குதூகலம் குதூகலம் .

Nada Mohan
Author: Nada Mohan