கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

நன்றியாய் என்றுமே!

நகுலா சிவநாதன்
நன்றியாய் என்றுமே!

பெரும் செல்வம் கல்விதனை
பேரும் பேறாய் கற்றுக் கொண்டோம்
அரும்சக்தி கொண்டிங்கு ஆளுமையை
அன்போடு வளர்த்திட்டோம்
கருவாகக் கல்விதனை கணக்கின்றி
கற்றிடவே வைத்திட்ட ஆசான்களை
கண்ணிறைந்து போற்றுகிறோம்
கடவுளர் என்றென்ணி!

அழியாத அருட்செல்வம் அகமதிலே
அன்போடு நிறைத்திட்ட வாழ்விலே
குருவான குலம்விளங்க என்றென்றும்
தருவாக கல்விதனை தழைத்திட வைத்தே
தண்மதியாய் தந்திட்டார் தலைசிறக்க
நண்மதியாய் நாமின்று போற்றுகிறோம்
நனிசிறக்க நல்வாழ்வு நன்மையாய்!!
என்றென்றும்!

நகுலா சிவநாதன் 1819

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading