” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த மைந்தனே 71

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
25-09-2025

நல்லூர் வீதியிலே
நல்லைக் கந்தன் சாட்சியாய்
நாட்டுமக்கள் நலனுக்காய்
நாட்டினாய் ஐந்து கோரிக்கை

தியாகத்தின் வலியை
தீர்க்கமாய் உணரா அரசு
உண்மை உரையை செவி
எடுக்கா இதயங்கள்.

தியாகப் பயணத்தின்
பன்னிரெண்டாம் நாள்,
ஊர் கூடி அழுதிருக்க
உலகெல்லாம் பார்த்திருக்க

தாகத்தோடு போராடி
தியாகத் தீயாய் நீ மாறி,
உண்ணா நோன்பிருந்து
உயிர்நீத்த மைந்தனே

சரித்திரத்தில் உன் பெயர்
சமாதியாய் பதித்தாயே.
இனத்திற்காய் வாழ்ந்தோரை இதயத்தால் வணங்கிடுவோம்..

Author: