” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

கண்ணீர்….

கண்ணீர்….
வலிகளை மறைத்திடவோ முகத்தினிலே
சிரிப்பை அணிந்தேனே;

ஆனாலோ கண்களின்
கண்ணீரோ – சில
சமயம் அவற்றை வெளிக்காட்டிவிடும்
விந்தைதான் என்னவோ??

சில நேரங்கள் தனிலே
உதட்டில் சிரிப்பு
கண்களில் நீரோ வழிந்தோடும்!!

மழை நீரை இரசிக்கும்
மக்களோ
அதை இரசிக்கும் வேளை;

என் மனதில் என்னவோ
வானம் தன் சோகங்களை
நினைத்து வடிக்கும்
கண்ணீர் தான் என்னவோ மழையாய் பொழிகிறது என்று;

என்ன விந்தை பாருங்கள்
வானமோ தன் வேதனை நினைத்து
வடிக்கும் கண்ணீர்
தனையே நாம் மழையாக கொண்டாடுகிறோம்;

இவ்வாறு தான்
சிலர் கண்ணீரும்
சுற்றத்தின் கொண்டாட்டத்திற்காய்
பொழிகின்றது….
விண்ணவன் – குமுழமுனை…

Author: