” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”

ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே… இதுவும் கொடையே “ 16.10.2025

நீலவானம் நிறைந்தபூமி பரந்தகடல்
விரிந்தகுடா உயர்ந்தமலைகள் மரஞ்செடிகொடி
அத்தனையும் இயற்கையின் கொடையே
இலையுதிர்காலம் இயற்கையின் வரமே
இலைகள் விழும்ஓசை உலகின் இசையே !

பசுமை மரங்கள் பழைய ஆடையகற்றி
புதுமையை வரவேற்க தயாராகுது
இலைகள் உதிர்வது முடிவல்ல
புதிய கிளைகள் பிறக்கும் முன்னுரையது
இயற்கை நமக்கு கற்பிக்கும் பாடமது
விழுவதுதான் எழுகைக்கான வேதமிது !

மஞ்சள்சிவப்பு வண்ணம்பூசி மரங்கள்மலர
மழைத்துளிகளும் தென்றல்காற்றில் தாலாட்டுப்பாட
பூமித்தாயும் சில்லென்று சிலிர்க்கும் சிங்காரக்காலம்
இலையுதிர்காலம் நம்பிக்கையின் சின்னம்
இயற்கை சொல்லும் வாழ்க்கைப் பாடம்
இயற்கையின் வரமே இதுஇயற்கையின் கொடையே !