23
Oct
பாதை
ஜெயம்
வாழ்க்கை
ஒரு நேர்கோடல்ல
சில நேரம் வளைந்து நகரும்
சில நேரம் மறைந்து மறைக்கும்
ஒவ்வொரு நாளும்...
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-10-2025
பேச்சை இழந்த பின்
பேசாத அத்தியாயம்
அலையற்ற கடலாய்
அமைதியின் நிலையாய்
மௌனத்தின் மொழியாய்
மனங்களின் உரையாடலாய்
சொல்லமுடியாமல் வார்த்தைகளை
சுமந்து துடிக்கும் சகபணித் தோழியே!
வேற்று மொழி பேசினாலும்
வேடம் அற்ற நேசிப்பினால்
பல கதைகள் பேசினோம்
பாசத்தை பரிமாறினோம்.
பணிஓய்வு காலம் உனை அணுக
பக்கவாதம் அணிந்ததுவே
மிக்க துயர் நெஞ்சடைக்க
மௌனமொழியை வரைகிறேன்.
உன் ஓசைகள் இழந்தாலும்
எண்ணங்கள் புரிகிறது
ஆசைகள் நிறைவேற
ஆண்டவனைப் பிரார்த்திப்போம்.
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.