மௌனத்தின் மொழி 74

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-10-2025

பேச்சை இழந்த பின்
பேசாத அத்தியாயம்
அலையற்ற கடலாய்
அமைதியின் நிலையாய்

மௌனத்தின் மொழியாய்
மனங்களின் உரையாடலாய்
சொல்லமுடியாமல் வார்த்தைகளை
சுமந்து துடிக்கும் சகபணித் தோழியே!

வேற்று மொழி பேசினாலும்
வேடம் அற்ற நேசிப்பினால்
பல கதைகள் பேசினோம்
பாசத்தை பரிமாறினோம்.

பணிஓய்வு காலம் உனை அணுக
பக்கவாதம் அணிந்ததுவே
மிக்க துயர் நெஞ்சடைக்க
மௌனமொழியை வரைகிறேன்.

உன் ஓசைகள் இழந்தாலும்
எண்ணங்கள் புரிகிறது
ஆசைகள் நிறைவேற
ஆண்டவனைப் பிரார்த்திப்போம்.

Jeba Sri
Author: Jeba Sri

ராணி சம்பந்தர் நாலும் சேர்க்குமே நல்லுறவு அல்லும் பகலுமே பாடுபடவே கல்லும் கனியாகும் கூட்டுறவு சொல்லும் செயலும் பல்லுறுதி கொல்லும்...

Continue reading

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading