28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
” துறவு பூண்ட உறவுகள் “
ரஜனி அன்ரன் ((B.A) “ துறவு பூண்ட உறவுகள் “ 30.10.2025
துறவு என்பது வெறுப்பல்ல
உறவை வெறுத்து பேரன்பின் எல்லைகாண
படகாய் இருந்த உறவுப்பற்றை வெறுத்து
பந்தபாசம் தனைஒறுத்து
இனிமை வாழ்வு கசந்துபோக
துயரக்கலவை வாழ்வை அணைக்க
உறவுச்சங்கிலியும் அறுந்துபோக
துறவினைநாடி பரமனை அடைவார் துறவிகள் !
தூரதேசம் தன்னில் துறவுபூண்ட உறவுகளாய்
உறவுகளுக்காய் ஆசாபாசம் துறந்து
அல்லும்பகலும் அயராது உழைத்து
குடும்பத்திற்காகவே தம்மையொறுத்து
துறவிகளாகவே வாழ்வினைத் தொலைத்து
பிறவிப்பயனின் பெருமைபேணும்
இளைஞர்கள் வாழ்வும் கேள்விக்குறியே !
உதிரும்சருகாக உறவுகளும் ஓர்நாளில் பிரிய
பிரிவுத்துயரும் மனதைவாட்ட
புன்னகைபூத்த நினைவுகளெல்லாம் சுமையாக
நிலையில்லாத வாழ்வில் துறவே நிலையாம் !
Author: ரஜனி அன்ரன்
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...