12
Nov
கவிதை நேரம்-05.06.2025 கவி இலக்கம்-2014 தாயுமானவர் –
தமிழில் விடியல் முதல் ஒலி-2095 ஜெயா நடேசன்
புலம்பெயர் வாழ்விலே
தமிழர் வாழும் நகரத்திலே
சரித்திரம் படைத்த...
நகுலா சிவநாதன்
கடமை முதன்மை
காலையில் எழுவது கனிவென நாளும்
மாலையில் மகிழ்வுடன் உரைப்பது நலமே
வேளைகள் தோறும் தேடல்கள் சிறப்பே
வேண்டும் இறையைத் தொழுவது நலமே!
பாடல்கள் பாடி பாலர்களை ஊக்குவிப்பதும்
பாட்டி உரையைக் கேட்பதும் நலமே
தேடல்கள் எமக்குள் தேடிச் சேர்ப்பதும்
தெளிந்த அறிவைப் பெறுவதும் நலமே!
உலக இயற்கை உன்னத படைப்பு
உனக்குள் தேடல் உள்ளுர விரியட்டும்
கணக்குப் பார்த்து காலத்தை கழியாதே
கடமைகள் முதன்மை அதைநீ நம்பு
நகுலா சிவநாதன் 1828
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.