” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

கடமை முதன்மை

நகுலா சிவநாதன்
கடமை முதன்மை

காலையில் எழுவது கனிவென நாளும்
மாலையில் மகிழ்வுடன் உரைப்பது நலமே
வேளைகள் தோறும் தேடல்கள் சிறப்பே
வேண்டும் இறையைத் தொழுவது நலமே!

பாடல்கள் பாடி பாலர்களை ஊக்குவிப்பதும்
பாட்டி உரையைக் கேட்பதும் நலமே
தேடல்கள் எமக்குள் தேடிச் சேர்ப்பதும்
தெளிந்த அறிவைப் பெறுவதும் நலமே!

உலக இயற்கை உன்னத படைப்பு
உனக்குள் தேடல் உள்ளுர விரியட்டும்
கணக்குப் பார்த்து காலத்தை கழியாதே
கடமைகள் முதன்மை அதைநீ நம்பு

நகுலா சிவநாதன் 1828

Author:

ராணி சம்பந்தர் முதன் முதலாக முயற்சி பதிலுக்குப்பதில் பயிற்சி எதிலும் உயர்ச்சி பெறப் போட்டி உயிரானந்தமே ஐந்தோ அறியாப் பருவம் பதினைந்து...

Continue reading