இனிவரும் காலம்..

வசந்தா ஜெகதீசன்
இனிவரும் காலம்—
தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும்
தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய் ஆகிடும்
வன்மம் பெருகிடும் வாஞ்சை மறைந்திடும்
அன்பும் பாசமும் அடியோடு அகன்றிடும்
இன்பம் இருண்டிடும் துன்பம் துலங்கிடும்
தொடர்பாடல் குன்றிடும் உறவு மறைந்திடும்
உலகம் சுருங்கிடும் இனிவரும் காலம்
இனிக்குமா? இருளுமா?
காலத்தின் தோழனாய் கைத்தொலைபேசி
நேரத்தைப் போக்கிடும் நியாயத்தின் வாதி
தூரமே நேசமாய் பாசங்கள் வேசமாய்
துலங்கிடும் காட்சியில் மனிதங்கள் தொலையுது
நாட்களை புதைக்குது நட்பினைச் சிதைக்குது
தேடலை தேக்கியே தேவையைப் பெருக்குது
நன்றும் தீதும் உள்ளதை உராய்ந்து நம்மை நாமே புடமிடல் நன்றே!
நன்றி 10.11.25

Author:

ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

Continue reading