திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

இனிவரும் காலம்..

வசந்தா ஜெகதீசன்
இனிவரும் காலம்—
தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும்
தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய் ஆகிடும்
வன்மம் பெருகிடும் வாஞ்சை மறைந்திடும்
அன்பும் பாசமும் அடியோடு அகன்றிடும்
இன்பம் இருண்டிடும் துன்பம் துலங்கிடும்
தொடர்பாடல் குன்றிடும் உறவு மறைந்திடும்
உலகம் சுருங்கிடும் இனிவரும் காலம்
இனிக்குமா? இருளுமா?
காலத்தின் தோழனாய் கைத்தொலைபேசி
நேரத்தைப் போக்கிடும் நியாயத்தின் வாதி
தூரமே நேசமாய் பாசங்கள் வேசமாய்
துலங்கிடும் காட்சியில் மனிதங்கள் தொலையுது
நாட்களை புதைக்குது நட்பினைச் சிதைக்குது
தேடலை தேக்கியே தேவையைப் பெருக்குது
நன்றும் தீதும் உள்ளதை உராய்ந்து நம்மை நாமே புடமிடல் நன்றே!
நன்றி 10.11.25

Author:

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading