முதல் ஒலியின் அரசன் பகுதி 1

ஜெயம்

காற்றலையை தன் ஒலிகளால் வசப்படுத்தியவர்
மாயக்குரலால் பல மனங்களை கவர்ந்தவர்
சொற்களின் இராச்சியம் என்றால் அவர்தான்
ஒலியின் அரசனான அதிபராம் மோகன்

காலையில் புன்னகை கதிரவனும் விழிக்கும்
இரவின் குரலும் அறிவோடு ஒலிக்கும்
ஒலிவாங்கி இவரது ஏர் எனலாம்
வார்த்தை பசளைகொண்டு மனநிலம் உழுவார்

பேசும் ஒவ்வொரு வரியும் தத்துவம்
சொல்லும் செய்திகளோ சிந்தனையை தூண்டும்
ஒலி உலகில் இவர்தான் ராஜா
கேட்பவரின் இதயம் இவர் அரியாசனம்

வானொலி என்றால் குரல் மட்டுமா
அதுவொரு உயிருள்ள உறவைப் போன்றது
இன்று ஒரு சாதாரண நாளல்ல
மனங்களை இணைக்கும் அலைகளின் விழா

Author:

வசந்தா ஜெகதீசன் வரலாறு பலபாகம் வழிகூறும் பலகாலம் தமிழ்ப்பள்ளி உருவாக்கம் தரணிக்கே தனிமகுடம் உறவுகள் ஓன்றாகும் உயிர்ப்பு மொழி தமிழாகும் அடுத்த தலைமுறையும்...

Continue reading