ஆறுதல் யார் தருவார்

ராணி சம்பந்தர்

சொட்டுச் சொட்டானதோ
கொட்டிப் பெருத்த டிட்வா
புயலுடன் கட்டிப் புரண்டே
அயலும் ஒட்டிக்கொண்டது

கரையோடித் திரண்ட அது
நுரை கக்கி மரம், விலங்கு,
வீடென நிரை நிரையாகக்
படகோட்ட கூட்டிச் சென்றது

பெருங்குளம் முட்டி முடைய
வயல் ,வரம்பு ,வாய்க்கால்
தேடி ஓடிப் வீதிப் பாலமும்
மண்ணரித்தே உடைத்தது

துள்ளிக் குதித்த மீன்களை
பள்ளிச் சிறுவர், பெரியவர்
அள்ளிக் குவிக்க அலையும்
காத்திருந்து உடலும் காவிட

துளைத்தெடுத்த மண் சரிவு
உயிரோடு புதைந்த மலையக
வாழ் மானிடரது அழுகுரலும்,
கொதிக்கும் கதறலும் ,பெரு-
மூச்சுக் குதறலும் மூசிடவே
யார்தான் ஆறுதல் தருவாரோ?

Author:

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading