ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும் (766) 18.06.2026

செல்வி நித்தியானந்தன் ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும் உடம்பின் வலுவே ஆரோக்கிய பயிற்சி பயிற்சி ஆசனம் எமக்கான வளர்ச்சி நாளும்...

Continue reading

நகைப்பானதோ மனித நேயம்….

நகைப்பானதோ மனித நேயம்….
இலக்கம் 31
புயலோ நாட்டை சூறையாடிடும் வேளைதனிலே;

தம் நலம் பேணவே
பிறர் நலம் பற்றியே
துளியும் கருதாதே
முற்படும் செயற்பாடுகளோ
எத்தனை??

உண்ண உணவின்றியே
பல மக்கள் தவித்திடும்
வேளைதனிலுமே;

மிதமிஞ் உணவை சமைத்து அதை வீணாக்கியுமே;

மக்களும், சிறார்களும்
பசியால் வாடி தவிதவித்திடும்
வேளதனிலே;

தம்மிடம் உணவிருந்துமே
அவ்வுணவை கொடுத்துதவிடாது;

இந்தக் காதால் கேட்டு
அந்தக் காதால் விட்டு விட்டு
செல்லும் இவர்களை
நான் என் சொல்லட்டும்??

இச் சூழ்லைதனிலே
விலங்குகள் கூட
விரோதம் பாராட்டாது
ஒன்றுக்கொன்று
துணைபுரிந்திடும்
சூழ்நிலை தனிலே

மனிதனாய் பிறந்துமே
மனித நேயமின்றி
செயற்பட்டிடும் இவ்
கொடூரங்கள் தனை
வஞ்சிக்கவோ வார்த்தைகள் இல்லையே
என்னிடம் ஏதும்….

விண்ணவன் – குமுழமுனை….

Author:

செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

Continue reading