நகைப்பானதோ மனித நேயம்

வியாழன் கவி 2255

நகைப்பானதோ மனிதநேயம்..

புனிதம் போற்றும் மானிட பூமியில்
புதைந்து போனது மனித நேயம்
உணர்வுகள் அற்றதாய் உறவுகள்
கலந்தாட மறந்தது மகிழ்வு தேசம்..

முதுமையும் தெருவில் அல்லாடுதலும்
முனகலில் பரிதாபம் புரியாமலும்
பிறந்த தேசத்தில் விரட்டப்பட்டும்
பயணத்தில் உயிர் துறப்பதுமானது..

காத்தலும் கை கொடுத்தலும் விலக கருணையும் காத்தலும் மறைய
சிரிப்பும் சிந்தனையும் விலக
ஆயுதமும் அணுகுண்டும் பெருகியது..

விழி நீர் துடைக்க நீளட்டும் கரமது
அழிக்கும் மழை நீரில் காக்கட்டும்
இடரில் இரங்கியே கரை சேர்க்கட்டும்
மனித நேயம் மீள மலரட்டுமே..
சிவதர்சனி இராகவன்
11/12/2025

Author:

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading