மார்கழியே மறக்குமா மனது..

வசந்தா ஜெகதீசன்
திங்களின் இறுதி திருப்பத்தின் உறுதி
வந்திடும் மாற்றம் ஆண்டெனப் பூக்கும்
பாலன் யேசுவின் பிரசவம் நிகழும்
பாரெங்கும் ஒளிக்குமிழ் வெளிச்த்தைப் பரவும்
ஒய்வில் மனங்கள் ஒத்தடம் தேடும்
நினைவில் ஏனோ நீங்காத கலக்கம்
அன்றைய பொழுதின் அவலத்தின் தேக்கம்
சுனாமி தந்த சுவட்டின் நெருக்கம்
சுக்கு நூறாகும் இதயத்தின் குறுக்கம்
இடரின் பிடியில் இன்னமும் வாழ்வு
இன்றும் இயற்கையின் தாக்கத்தில் உலகு
அன்னை மண் அவலத்தின் கோரமாய் பதிவுஎண்ணிட விம்முது இதயமே
நொருங்குது.
தொன்மையும் இன்றும் தொடரும்வலி
தொடர்கின்ற வாழ்விற்கு ஏது வழி!நன்றி

Author:

ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

Continue reading