நிழலாடுதே நினைவாயிரம்

ராணி சம்பந்தர்

நிழலாடுதே நினைவாயிரம்
பழகிய முற்றத்தில் ஓடி ஆடி
விளையாடச் சுற்றஞ் சூழ்ந்த
மனம் நிறை மகிழ்வாயிரமே
அற்றுப் போன கலாச்சாரம்
கழன்றதே அழிவாயிரமாய்.

மனிதன் நிஜ உழைப்பின்றி
வியர்வை சிந்தாது வாழ்ந்திட
குறுக்கு வழியில் புகழ் சேர்க்க
ஏறி விழ அலங்கோலமாயிரம்

தனக்கு உரிமையற்றது அபகரிக்க
களவெனும் போர்வையில் சிக்கித்
தவித்து உயிரற்ற சிலை போலாயிரம்

துவண்டு போகும் நெஞ்சம் தவண்டு
தவண்டாவது தம் சொந்தக் காலில்
உயராது மது ,மாது போதையிலே
அடிமைகள் ஆவது ஆயிரமாயிரம்

பொய் ,பிரட்டு ,உருட்டி உருட்டிப் பேசி
போலி வேஷங்களில் ஜாலியாகிட
நீந்திடும் கற்பனை கானல் நீராகிட
நிம்மதி இழந்து பெற்றோர் வேதனை
ஆகி சாதனை படைக்கும் உயிர்கள்
ஊசலிட நிழலாடுதே நினைவாயிரம்.

Author:

ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

Continue reading