சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

உயிர்மெய்யாய்….

வசந்தா ஜெகதீசன்
உயிர்மெய்யாய்…
மொழிக்கு முதலானது
முழுமைக்கு நிகரானது
உயிர்ப்பில் உலகானது உயிராமெய்யே வேரானது

வாழ்வின் தடமானது
வரலாற்று மொழியானது
தகமை பலமானது
தாய்மொழியாய் உறவானது

மூத்த தமிழாய் முதல்மொழியாய்
தரணி தனை ஆள்வது
குமரியில் உருவானது
குவலயத்தில் நிலையானது

எதுகை மோனை ஓன்றி
கவிதை வடிவானது
கனிவில் தமிழாகிடும்
தொடர்பில் உறவாகிடும்
தொன்மை நிறைந்த தமிழ்

இலக்கிய நயமானது
இலக்கண வலுவானது
இதுவின்றி எதுவாகிடும்
இன்னுயிராய் உயிர்மெய்யாய்
எம்மோடு வாழ்வாகுமே
இன்தமிழ் உலகாளுமே!
நன்றி மிக்க நன்றி

Author: