” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

உயிர்மெய்யாய்….

வசந்தா ஜெகதீசன்
உயிர்மெய்யாய்…
மொழிக்கு முதலானது
முழுமைக்கு நிகரானது
உயிர்ப்பில் உலகானது உயிராமெய்யே வேரானது

வாழ்வின் தடமானது
வரலாற்று மொழியானது
தகமை பலமானது
தாய்மொழியாய் உறவானது

மூத்த தமிழாய் முதல்மொழியாய்
தரணி தனை ஆள்வது
குமரியில் உருவானது
குவலயத்தில் நிலையானது

எதுகை மோனை ஓன்றி
கவிதை வடிவானது
கனிவில் தமிழாகிடும்
தொடர்பில் உறவாகிடும்
தொன்மை நிறைந்த தமிழ்

இலக்கிய நயமானது
இலக்கண வலுவானது
இதுவின்றி எதுவாகிடும்
இன்னுயிராய் உயிர்மெய்யாய்
எம்மோடு வாழ்வாகுமே
இன்தமிழ் உலகாளுமே!
நன்றி மிக்க நன்றி

Author: