உயிர்மெய்யாய்….

வசந்தா ஜெகதீசன்
உயிர்மெய்யாய்…
மொழிக்கு முதலானது
முழுமைக்கு நிகரானது
உயிர்ப்பில் உலகானது உயிராமெய்யே வேரானது

வாழ்வின் தடமானது
வரலாற்று மொழியானது
தகமை பலமானது
தாய்மொழியாய் உறவானது

மூத்த தமிழாய் முதல்மொழியாய்
தரணி தனை ஆள்வது
குமரியில் உருவானது
குவலயத்தில் நிலையானது

எதுகை மோனை ஓன்றி
கவிதை வடிவானது
கனிவில் தமிழாகிடும்
தொடர்பில் உறவாகிடும்
தொன்மை நிறைந்த தமிழ்

இலக்கிய நயமானது
இலக்கண வலுவானது
இதுவின்றி எதுவாகிடும்
இன்னுயிராய் உயிர்மெய்யாய்
எம்மோடு வாழ்வாகுமே
இன்தமிழ் உலகாளுமே!
நன்றி மிக்க நன்றி

Author:

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading