நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

உயிர்மெய்யாய்….

வசந்தா ஜெகதீசன்
உயிர்மெய்யாய்…
மொழிக்கு முதலானது
முழுமைக்கு நிகரானது
உயிர்ப்பில் உலகானது உயிராமெய்யே வேரானது

வாழ்வின் தடமானது
வரலாற்று மொழியானது
தகமை பலமானது
தாய்மொழியாய் உறவானது

மூத்த தமிழாய் முதல்மொழியாய்
தரணி தனை ஆள்வது
குமரியில் உருவானது
குவலயத்தில் நிலையானது

எதுகை மோனை ஓன்றி
கவிதை வடிவானது
கனிவில் தமிழாகிடும்
தொடர்பில் உறவாகிடும்
தொன்மை நிறைந்த தமிழ்

இலக்கிய நயமானது
இலக்கண வலுவானது
இதுவின்றி எதுவாகிடும்
இன்னுயிராய் உயிர்மெய்யாய்
எம்மோடு வாழ்வாகுமே
இன்தமிழ் உலகாளுமே!
நன்றி மிக்க நன்றி

Author: