சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

” சுதந்திரம் “

ரஜனி அன்ரன் (B.A) ” சுதந்திரம் ” 05.02.2026

சுதந்திரம் என்பது அடிப்படை உரிமை
அதுவே ஒவ்வொரு மனிதனதும் பிறப்புரிமை
சுதந்திரமென்பது வெறும் உரிமையல்ல
அதுஒவ்வொரு தனிமனிதனின் பொறுப்புரிமை
தடையின்றி வாழும் முழுமையான உரிமையே
உண்மையான சுதந்திரம் !

தலை நிமிர்ந்து நடந்து
தவறுகளைத் தட்டிக் கேட்டு
தனிமனித எண்ணம் சிந்தனை செயற்பாடுகளோடு
பிறரின் உரிமையையும் மதித்து
ஒளியாய் வாழ்தலே சுதந்திரம் !

தேசம் பெற்ற சுதந்திரம்
நேசமான வரலாற்றின் பக்கமென்றால்
மனம்பெறும் சுதந்திரம் மகத்துவமானதே
சுதந்திரம் என்பது காற்றைப் போன்றதே
நாம்அனுபவிக்கும் இந்த சுதந்திரம்
பலரின் இரத்தத்தாலும் வியர்வையாலும் கிடைத்ததுவே
அதனைப்போற்றிப் பாதுகாப்போம் !