” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

” சுதந்திரம் “

ரஜனி அன்ரன் (B.A) ” சுதந்திரம் ” 05.02.2026

சுதந்திரம் என்பது அடிப்படை உரிமை
அதுவே ஒவ்வொரு மனிதனதும் பிறப்புரிமை
சுதந்திரமென்பது வெறும் உரிமையல்ல
அதுஒவ்வொரு தனிமனிதனின் பொறுப்புரிமை
தடையின்றி வாழும் முழுமையான உரிமையே
உண்மையான சுதந்திரம் !

தலை நிமிர்ந்து நடந்து
தவறுகளைத் தட்டிக் கேட்டு
தனிமனித எண்ணம் சிந்தனை செயற்பாடுகளோடு
பிறரின் உரிமையையும் மதித்து
ஒளியாய் வாழ்தலே சுதந்திரம் !

தேசம் பெற்ற சுதந்திரம்
நேசமான வரலாற்றின் பக்கமென்றால்
மனம்பெறும் சுதந்திரம் மகத்துவமானதே
சுதந்திரம் என்பது காற்றைப் போன்றதே
நாம்அனுபவிக்கும் இந்த சுதந்திரம்
பலரின் இரத்தத்தாலும் வியர்வையாலும் கிடைத்ததுவே
அதனைப்போற்றிப் பாதுகாப்போம் !