” சுதந்திரம் “

ரஜனி அன்ரன் (B.A) ” சுதந்திரம் ” 05.02.2026

சுதந்திரம் என்பது அடிப்படை உரிமை
அதுவே ஒவ்வொரு மனிதனதும் பிறப்புரிமை
சுதந்திரமென்பது வெறும் உரிமையல்ல
அதுஒவ்வொரு தனிமனிதனின் பொறுப்புரிமை
தடையின்றி வாழும் முழுமையான உரிமையே
உண்மையான சுதந்திரம் !

தலை நிமிர்ந்து நடந்து
தவறுகளைத் தட்டிக் கேட்டு
தனிமனித எண்ணம் சிந்தனை செயற்பாடுகளோடு
பிறரின் உரிமையையும் மதித்து
ஒளியாய் வாழ்தலே சுதந்திரம் !

தேசம் பெற்ற சுதந்திரம்
நேசமான வரலாற்றின் பக்கமென்றால்
மனம்பெறும் சுதந்திரம் மகத்துவமானதே
சுதந்திரம் என்பது காற்றைப் போன்றதே
நாம்அனுபவிக்கும் இந்த சுதந்திரம்
பலரின் இரத்தத்தாலும் வியர்வையாலும் கிடைத்ததுவே
அதனைப்போற்றிப் பாதுகாப்போம் !

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading