” செம்மொழியாம் எம்தமிழ் “

ரஜனி அன்ரன் (B.A) ” செம்மொழியாம் எம்தமிழ் ” 19.02.2026

அன்னைத் தமிழே அருமருந்தே
அமுதத் தமிழாய் மலர்ந்தவளே
முன்னைத் தவத்தின்பயனாக
கன்னித் தமிழாய் கனிந்தவளே
உன்னைப் போற்றிப் பணிகின்றேன்
உலகின் முதல்மொழி நீதானே !

வள்ளுவன் வழியில் வாழ்வியல்தமிழாய்
கம்பன் கணிப்பில் காவியத்தமிழாய்
பாரதி நடையில் புதுமைத்தமிழாய்
பாரதிதாசன் வழியில் புரட்சித்தமிழாய்
இளங்கோவின் இலக்கில் இலக்கியத்தமிழாய்
இரண்டறக் கலந்த செம்மொழியே நீவாழி !

அன்னைத்தமிழின் சிறப்பினை
அளவிட வார்த்தைகள் கிடையாதே
இளமை புதுமை தொன்மை மிகுந்த
இனிமைத் தமிழே – உனை
மூச்சாய் கொண்டோம் பேச்சாய் கொண்டோம்
எத்தனை மொழிகள் தான்இருந்தாலும்
செம்மொழியாம் உந்தனுக்கு ஈடாகுமா ?

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading