தமிழ் பள்ளி

ராணி சம்பந்தர்

இதயத்தில் ஏற்பட்ட வலி தீர
உதயமாகிய தமிழ் பள்ளிகள்
ஆதாயமின்றி விழி திறந்தது
இடம்பெயர்ந்தே முடமாகிய
வாழ்வு பேரொளி பிறந்தது

திறனான கள்ளங்கபடமற்ற
சிறுவர் உள்ளங் கவரவே
துள்ளி விளையாடி அள்ளிக்
கற்ற படிப்பு சிரமேறியே
சித்திரமாய்ச் சீறிப் பறந்தது

ஆதியில் மண்ணில் எழுதியது
போதி மர நிழலில் உழுதே
பயிரிட்டது விதை ஊன்றியது

ஏதிலியின் தாக்கம் அதிலும்
பிறந்த மண் தாக்கம் உயிரில்
மேலாகவே உயர ஊன்றியது

தமிழ் பள்ளியில் தழுவியதோ
சிறுவர், இளையோர் வாசித்து
எழுதிய பயிற்சி பரீட்சையில்
மிகச்சிறந்து சித்தி பெற்றே
முத்திரை பொறித்தனரே .

Author:

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading