மேன்மையுறு…

வசந்தா ஜெகதீசன்
விட்டகலா வேட்கையில் வாழுகின்ற வரம்
வேண்டுமே தாய்மையின் பரிசத்தின் பலம்
பெண்ணினத்து பேறுகள் பெருமையில் நிறையும்
அவதாரம் பலவாகி வாழ்வு நகரும்
ஆற்றிடும் சேவைகளோ அளவற்றுத் தொடரும்
தாங்குதிறன் பெண்ணுக்கு தனித்துவத்து மகுடம்
பாங்குறவே பற்பல காரியத்தின் சித்தி
இல்லறமாய் நல்லறத்தை ஏற்றுகின்ற யுக்தி
உறவுகளை உரமாக்கி ஊக்கமது தருவாள்
விண் முதலாய் எங்குமே தன்திறனில் மிளிர்வாள்
வீழ்தலிலும் எழுதலே வீரமென மொழிவாள்
நன்னெறியில் நல்வாழ்வு அடித்தளமாய் செதுக்கி
நாளைய தலைமுறையை நற்பண்பில் நிறுத்தி
நம்மோடு நாளுமவள் நல்வாழ்வு நகருவது சக்திநம்மோடுநாளுமவள்வாழுகின்றவரமே!
நன்றி

Author: