05
Mar
“விலையில்லா வாழ்க்கையிலே”
நேவிஸ் பிலிப் கவி இல (573)
சுற்றாமல் நிற்கும் புவிப் பந்தில்
நிகழ்கின்ற அதிசயம்...
நகுலா சிவநாதன்
வெற்றியுடன் உயர்வாய் மகளே!
வேராக கல்விதனை வென்றிட்ட மகளே!
சீரான உயர்வுகளை சந்தித்தே நீ
நேராக துணைப்;பேராசிரியராக இன்று
நேர்த்தியாய் வந்தாய் பூரிப்பாய் வென்றாய்
கற்றிடும் கல்வியே காலத்தின் விதையே
பற்றிடும் பக்குவம் அறிந்தே உயர்ந்தாய்
சுற்றிலும் முயற்சி சுடராய் அறிவும்
பெற்றிட்டு உயர்வாய் பேறுடன் நீயும்
பெற்றோர் வாழ்த்த பெருமையும் பெற்று
உற்றோர் மதிக்க உளமார நீயும்
நற்றவ கல்வியால் நனிசிறப்பு பெற்று
வென்றே உயர்வாய் வாழி மகளே!
நகுலா சிவநாதன் 1845
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.