பெண்களைப் போற்றுவோம்

சக்தி சிறினிஙச்கர்
பெண்களே உலகின் கண்கள் ஆவார்
மண்ணின் பொறுமை மங்கை அவளே
விண்ணிலே பெருமை வீரமும் கொண்டாள்
கண்ணென இருந்து கடமையைச் செய்வாள்
மலரினை ஒத்த மென்மையும் அவளே
நிலவன் ஜொலிப்பாள் நித்தமும் சேவை
செய்துமே இல்லம் செழித்திட உழைப்பாள்
தாதியாய்த் தாயாய் தந்தையாய் சோதரியாய்
ஆதி முதலாய் அன்பின் சிகரமாய்
இல்லறம் சிறந்திட இமயமாய் இருப்பாள்
நல்லறம் செய்ய நற்றவம் பெற்றாள்
பேறு பெற்றவள் பெண்ணே அறிவாய்
ஆறுதல் அளித்திட அருகினில் இருப்பாள்
தென்றலும் அவளே தேற்றலும் செய்வாள்
துன்ப வேளையில் துவண்டிடா மங்கை!

Author: