பேரிடரின் மறுபெயர் டித்வா

பாஸ்கரன்.க

பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின் கோரம்
கொத்தாய் மாந்தர் மடிந்த அவலக் கோலம்
குளங்கள் உடைந்தன, குன்றுகள் சரிந்தன, வீதிகள் சிதைந்தன…
வீடுகள் மூழ்கின
உயிர்கள் உதிர்ந்தன.
உறவுகள் தொலைந்தன..
நதிகள் பாய்ந்தன…
கரைகள் கரைந்தன….
ஊழித் தாண்டவம் ஆடிய புயலால் உயிர்கள் மடிந்தன
ஆழிகள் கூட கரைகள் கடந்து ஊருள் புகுந்தன
வாழிடம் தன்னை வெள்ளம் மூடி அள்ளிச் சென்றது
அழிவுகள் தந்த அவலம் எங்கள் ஊரைத் தின்றது.

ஆனாலும்….
நாங்கள் மீண்டும் எழுவோம்
ஒன்றாய் மீண்டு எழுவோம்

Author:

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading