பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

போர் என்னும் அவலம் 754 19.03.2026

செல்வி நித்தியானந்தன்
போர் என்னும் அவலம்

வல்லரசு என்ற போர்வை
வந்ததே இன்று பார்வை
வறுமை பஞ்சம் பட்டினி
வலியானதே பலரது நிலமை

வர்த்தகம் என்பது வியாபாரம்
வஞ்சித்து அடிப்பது அநியாயம்
வயிற்றுப் பசிக்கு வழியேது
வசதியற்றவர் புசிக்க நிலையேது

ஆயுத விற்பனை ஒருபுறம்
ஆதரவு சேர்க்கும் மறுபுறம்
ஆட்சி ஆலோசனை பயனேது
ஆதிக்கம் காட்டுவதால் அழிவுதானே

நிம்மதி இல்லா பலரது வாழ்வு
நிழல் போல் தொடரும் யுத்தம்
நித்தம் பலரது அழுகை சத்தம்
நீட்சியா நீங்குமா புரியாத விடியல்

Author: