போரிடும் உலகமோ..!!

வியாழன் கவி 2307!!

போரிடும் உலகமோ..

பொறை கொண்ட உலகு தான்
போர்க்குணம் கொண்டதே இன்று
ஆர்ப்பரிக்கும் ஆயுதங்கள் வாய்
அகப்பட்ட உயிர்கள் நிலை எங்கே!!

வான் மீது வட்டமிடும் வல்லூறாய்
வாரிக் கொட்டும் குண்டுமழை
வான் முட்டும் கட்டடங்கள்
மண்ணை வந்தே முத்தமிடுதே..

கருகிப் போகும் குருத்துகளாய்
இளம் தலைமுறையும் வாட
குருதி மழை பொழியுதெங்கும்
குற்றங்களே நிறையுதெங்கும்

வான் வழி போக்கிவரத்து
வழிகள் அடைபட்டுப் போக
அங்கும் இங்குமாய் உறவுகள்
அல்லலில் தவித்தல் மாறாதோ
சிவதர்சனி இரா
19/3/2026

Author:

செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

Continue reading