மகிழ்வும் தொலைந்து கவலை வருமே (758) 16.04.2026

செல்வி நித்தியானந்தன்
மகிழ்வும் தொலைந்து கவலை வருமே

சித்திரை வந்தாலே மனதுக்கு மகிழ்வு
முத்திரை பதித்ததுபோல வருடம் வந்திடும்
எத்தரை வந்தாலும் தவித்திடும் ஒருபுறம்
எண்ணியே நாமும் ஏக்கமும் சேர்ந்திடும்

சொந்தமும் இல்லா தனித்த எம்பயணம்
சுற்றமும் இல்லா சீரிய தொடராம்
நாற்புறமும் சிதறிய கூட்டமாய் நானும்
நாடியே செல்ல உறவும் இல்லையே

அதிகாலை எழுந்து சந்தோசம் கலைந்திட
அடடா வாழ்க்கை இப்படி நிலையோ
ஆலயம் செல்ல ஆட்களும் இல்லை
அன்பாய் கதைக்க யாருமே இல்லையே

தாயக மண்ணில் தனித்துவ மகிழ்வு
உறவுகள் இணைந்து கூடியே இணைவு
உணவுப் பண்டங்கள் பரிமாற்ற நிகழ்வு
உலமே மறந்து உவகையில் நிறைவு

Author:

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading