திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

புழுகு வெடி (392) 30.04.2026

ராணி சம்பந்தர் ஜேர்மனி
புழுகு வெடி

சேற்றிலே மலர்ந்தாலும்
செந்தாமரை அழகானது
காற்றிலே உலர்ந்தாலும்
ரோசாப்பூ வாசமுள்ளது

கூற்று எனும் பேச்சிலே
புலரும் பூக்கள் மட்டும்
வாய் நாறப் பொய்யும்
பிரட்டும் கூசாது உளற

வாய் பிதற்றும் பொய்யில்
உண்மை எதுவென்று
சொல்பவர்க்குத் தெரிந்தும்
பேய் மனம் ஏதேதோ
ஆதாயம் தேடுகிறது

கேட்பவர் காதில் பூச் சுற்றிப்
பழகிப் போனது அதுவோ
காலம் கடந்து கோலம்
கரைந்திடப் புழுகு வெடி
சுக்கல் சுக்கலாகிடுமே .

ராணி சம்பந்தர் ஜேர்மனி

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading