சித்திரா பருவம் 760 30.04.2026

செல்வி நித்தியானந்தன் சித்திரா பருவம் அன்னையருக்கு வருடம் ஒருமுறை அழகாய் வந்திடும் விரதமாகும் ஆலயங்களில் சித்திரைக் கஞ்சி அகமே நிறைந்து...

Continue reading

பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

புழுகு வெடி (392) 30.04.2026

ராணி சம்பந்தர் ஜேர்மனி
புழுகு வெடி

சேற்றிலே மலர்ந்தாலும்
செந்தாமரை அழகானது
காற்றிலே உலர்ந்தாலும்
ரோசாப்பூ வாசமுள்ளது

கூற்று எனும் பேச்சிலே
புலரும் பூக்கள் மட்டும்
வாய் நாறப் பொய்யும்
பிரட்டும் கூசாது உளற

வாய் பிதற்றும் பொய்யில்
உண்மை எதுவென்று
சொல்பவர்க்குத் தெரிந்தும்
பேய் மனம் ஏதேதோ
ஆதாயம் தேடுகிறது

கேட்பவர் காதில் பூச் சுற்றிப்
பழகிப் போனது அதுவோ
காலம் கடந்து கோலம்
கரைந்திடப் புழுகு வெடி
சுக்கல் சுக்கலாகிடுமே .

ராணி சம்பந்தர் ஜேர்மனி

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading