திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

அகவையின் உயர்வு 671

செல்வி நித்தியானந்தன்
அகவையின் உயர்வு

அகவையின் உயர்வு ஆனந்த வரவு
ஆர்ப்பாட்ட மில்லா அன்பின் நிறைவு
காலமும் விரைவாய் ஞாலமும் குளிராய்
சோகங்கள் பலதாய் சோர்ந்திடும் மனமாய்

முடியாது போய்விடினும் சொல்லும் உத்வேகம்
பிடித்துமே கையாலே பின்னாலே வருவதும்
இடிபட்டு இருந்தாலும் இன்னலும் போய்விடும்
இகழ்ச்சி இல்லாது எந்நாளும் உதவிடுவர்

மகிழ்ச்சி நாளுமே மனதில் கொண்டுமே
புகழ்ச்சி இன்றியே உதவியும் செய்திட
மகவும் உலகமே நானுமே வாழ்ந்திட
வலியாய் இன்றுமே அகவை கழிந்திட

பணமும் பரிசும் பகிர்ந்தே தந்திட
பாசமாய் என்றுமே பக்க பலமாய்
கனவுகள் சுமந்த வாழ்வின் பயணம்
கடக்குது கண்ணீர் கரைதனை நாடியே

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading