மனவலி

ராணி சம்பந்தர்

முள்ளிவாய்க்கால் முனகல்
இன்னமும் பலரின் காதில்
மறக்கமுடியாது ஒலித்திட

மே 18 வருகிறது என்றதும்
தூக்கம் கலைய துக்கமும்
நெஞ்சை அடைத்தடைத்து
படபடக்கும் இதயவலி வந்திட

கோயிலுக்கு நேர்ந்த ஆட்டை
அறுத்து உதிரம் சீறியது போல
கொத்துக் குண்டால் சிதறிச்
சின்னாபின்னமாகி இரத்தம்
சிந்திட

மனித நேயம் இன்று வரை
கண் மூடிய சோதனைகளே
எத்தனை புது அரசாங்கம்
வந்தாலும் வேதனைகளே
அத்தனையும் வித்தைகள்
காட்டும் ஏமாற்று சாகஷமே .

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading