நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

மனவலி

ராணி சம்பந்தர்

முள்ளிவாய்க்கால் முனகல்
இன்னமும் பலரின் காதில்
மறக்கமுடியாது ஒலித்திட

மே 18 வருகிறது என்றதும்
தூக்கம் கலைய துக்கமும்
நெஞ்சை அடைத்தடைத்து
படபடக்கும் இதயவலி வந்திட

கோயிலுக்கு நேர்ந்த ஆட்டை
அறுத்து உதிரம் சீறியது போல
கொத்துக் குண்டால் சிதறிச்
சின்னாபின்னமாகி இரத்தம்
சிந்திட

மனித நேயம் இன்று வரை
கண் மூடிய சோதனைகளே
எத்தனை புது அரசாங்கம்
வந்தாலும் வேதனைகளே
அத்தனையும் வித்தைகள்
காட்டும் ஏமாற்று சாகஷமே .

Nada Mohan
Author: Nada Mohan