பெருவலி சுமந்த பேரிடர்……

ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026 மேபதினெட்டு மேதினியின் கரிநாள் பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள் வெறும்...

Continue reading

குமுதினிப் படுகொலை – 90, 41ஆம் ஆண்டு நினைவு

ஜெபா ஸ்ரீதெய்வீகன் – கனடா
15-05-2026

ஆழி சூழ்ந்த நெடுந்தீவு தன்னில்
வாழி எனப் புறப்பட்ட குமுதினி
குருதி தோய்ந்த கொடுவாள் வீசி
ஒருவர் அன்றி முப்பத்தாறுயிரை

கொஞ்சமும் இன்றி கருணை அற்று
நெஞ்சம் பிளக்க நேசம் இழக்க
ஆண்கள் பெண்கள் மழலைகள் என்றே
மாண்பிலா மாந்தர் மனிதம் சிதைத்தார்

குற்றுயிர் உடல்கள் குருதியில் மிதக்க
உற்றார் அழுத ஒலிவிண் அதிர
இற்றை நாளொரு நரக நாளே
வெற்றி என்றே வெறிநாய் சிரிக்க

துறைமுகம் உதிரத்தில் உறைந்ததுவே
பனை தென்னை பரிதாபமாய் பார்த்ததுவே
குதிரையும் பசுக்களும் குமுறித் துடிக்க
அதிர்வினில் கடலலை சிவந்து நிற்குதே

Jeba Sri
Author: Jeba Sri

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading