குமுதினிப் படுகொலை – 90, 41ஆம் ஆண்டு நினைவு

ஜெபா ஸ்ரீதெய்வீகன் – கனடா
15-05-2026

ஆழி சூழ்ந்த நெடுந்தீவு தன்னில்
வாழி எனப் புறப்பட்ட குமுதினி
குருதி தோய்ந்த கொடுவாள் வீசி
ஒருவர் அன்றி முப்பத்தாறுயிரை

கொஞ்சமும் இன்றி கருணை அற்று
நெஞ்சம் பிளக்க நேசம் இழக்க
ஆண்கள் பெண்கள் மழலைகள் என்றே
மாண்பிலா மாந்தர் மனிதம் சிதைத்தார்

குற்றுயிர் உடல்கள் குருதியில் மிதக்க
உற்றார் அழுத ஒலிவிண் அதிர
இற்றை நாளொரு நரக நாளே
வெற்றி என்றே வெறிநாய் சிரிக்க

துறைமுகம் உதிரத்தில் உறைந்ததுவே
பனை தென்னை பரிதாபமாய் பார்த்ததுவே
குதிரையும் பசுக்களும் குமுறித் துடிக்க
அதிர்வினில் கடலலை சிவந்து நிற்குதே

Jeba Sri
Author: Jeba Sri

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading