குமுதினிப் படுகொலை – 90, 41ஆம் ஆண்டு நினைவு

ஜெபா ஸ்ரீதெய்வீகன் – கனடா
15-05-2026

ஆழி சூழ்ந்த நெடுந்தீவு தன்னில்
வாழி எனப் புறப்பட்ட குமுதினி
குருதி தோய்ந்த கொடுவாள் வீசி
ஒருவர் அன்றி முப்பத்தாறுயிரை

கொஞ்சமும் இன்றி கருணை அற்று
நெஞ்சம் பிளக்க நேசம் இழக்க
ஆண்கள் பெண்கள் மழலைகள் என்றே
மாண்பிலா மாந்தர் மனிதம் சிதைத்தார்

குற்றுயிர் உடல்கள் குருதியில் மிதக்க
உற்றார் அழுத ஒலிவிண் அதிர
இற்றை நாளொரு நரக நாளே
வெற்றி என்றே வெறிநாய் சிரிக்க

துறைமுகம் உதிரத்தில் உறைந்ததுவே
பனை தென்னை பரிதாபமாய் பார்த்ததுவே
குதிரையும் பசுக்களும் குமுறித் துடிக்க
அதிர்வினில் கடலலை சிவந்து நிற்குதே

Jeba Sri
Author: Jeba Sri

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading