“ முயற்சியே பலம் முனைப்பே திடம்“

நேவிஸ் பிலிப் கவி இல( 611)

பாதங்கள் நடக்கத் துணிந்து விட்டால்
பாதைகள் மறுப்பு சொல்வதில்லை
முனைப்போடு நாம் முயன்றால்
தோல்வி என்பதே நமக்ககில்லை

திட்டமிடா உழைப்பும்
முடியுமா என்ற நினைப்பும்
பாதையின் தடைக்கல்லாகும்
வீழ்ச்சி கண்டு முடங்கிடாமல்
திடமோடு செயல்பட்டால்
வானமே நம் வசமாகும்

முன்னேற்றப் பாதையிலே
விழிகள் விடியலைத் தேடட்டும்
வெற்றியின் வாசல் ஏறிச் செல்ல
முயற்சி நம் படிக் கல்லாகட்டும்

நம்பிக்கை என்பது நாளைய வெற்றியின் விதை
இன்றே அதனை விதைத்திடுவோம்
அயர்ச்சி இன்றி முயற்சியோடு செயலாற்றி
பாரினில் மேன்மை பெற்றிடுவோம்.
நன்றி………..

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading