குன்றியதே சுறுசுறுப்பு (764) 28.05.2026

செல்வி நித்தியானந்தன் குன்றியதே சுறுசுறுப்பு குளிரும் காணாமல் போக வெப்பமும் வேகமாய் வந்திட ஒவ்வாமை கூடவே சேர்ந்திட ஒன்றித்து வாழும் நாமும் விற்றமீன் ...

Continue reading

ஒரு நாள் நீயில்லாவிட்டால்..

வியாழன் கவி -2345

ஒரு நாள்
நீயில்லாவிட்டால்..!!

நினைக்கையிலே உயிர்
வதைபட்டுக் கொள்ள
நீள் நாள் ஒன்றை எப்படி
நீயின்றிக் கழிப்பேன்
கைகளில் எப்பொழுதும்
கருத்தோடு சிறைப்பட்டு
காலை மாலை கூடவே
பயணிப்பது நீயல்லவோ?..

தூங்க வைப்பதும் எனை
ஒலியெழுப்பி விழித்திடவே
ஒளியூட்டி விளக்குமாகி
செவி நிறைக்கும் பாடல்
சேதி சொல்லும் அறிவாளி
அசைந்திடவே பயிற்சியாளன்
கற்பிக்கும் ஆசான் கலைஞன்
ஒட்டியே உறவாடும் ஞானவான்..

நிமிடத்துளி நீ இயங்கவே
மறுத்திடும் வேளை துடிக்கும்
இதயம் வெடிக்கும் வேகும்
மீள இயங்கிட ஓடுமே எங்கும்
நொடிக்கு ஒரு தடவையே
உரசி உள் நுழைந்து பாரா
விழி என்ன விழியோ..!!
சிவதர்சனி இரா
28/5/2026

Nada Mohan
Author: Nada Mohan