பதியமிடும் எழுத்தாணிகள்

இவை வரைந்த சொற்களால்
இழந்த மனிதங்கள் உயிர் பெறுகின்றன
இவை எழுதிய வரிகளில் இனங்களின் சரித்திரங்கள் உறங்குகின்றன

பல நேரம் காதலின் வாசத்தை வீசும்
சில நேரம் புரட்சியின் வீரியம் பேசும்
கையில் தழுவிய இதனோடு படைக்கும் படைப்புகள் பலநூறு
கருத்துக்கள் இதன் வழியாய் காகிதத்தில் கொட்டும்
உணர்வுகள் இதன் நுனியூடு மையாலே உயிர் பெறும்

அறிவின் கதவுகளை திறந்துவிடும் திறவுகோல்
காலம் அழிக்காத பதிவுகளை பதிந்துவிடும் எழுதுகோல்
வாள்கள் வெல்லாதவிடத்திலும் இவை வென்றுவிடும்
போரால் சரிந்த உலகை வரியால் கட்டிவிடும்

ஜெயம்
03-06-2026

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading