சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026

ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும்
ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி
எழுத்தின் தோற்றத்தை வரலாற்றை
எமக்கெல்லாம் எடுத்தியம்புவது எழுத்தாணிகளே
வரலாற்றின் ஊற்றுக்கள் எழுத்துக்களே
எழுத்தாணிகள் பதியமிடட்டும்
எழுத்துக்கள் விதைக்கப்படட்டும் !

எழுத்தாளர் வாரமதில் எழுத்தோடு முதலாகி
ஏற்றங்கள் பலவாகி படைப்புக்கள் பல்லாயிரமாகி
பாமுகப்பரப்பு சரிதமாகிறது இணையத்தில் பதியமாகி
படைப்புக்கள் நிறையட்டும் பாரெல்லாம் பரவட்டும்
தலைமுறைகளின் விரல்நுனிகளில் தமிழ்த்தேன் பதியமாகட்டும் !

இன்றைய பதியமிடும் எழுத்தாணிகளே
நாளைய சமுதாயத்தின் விடியலின்தீபங்கள்
கணணித்திரையிலும் காகிதப்பக்கத்திலும் பதியமிடுங்கள்
தோட்டாவைவிட தூரிகைபிடிக்கும் கையேவலிமை
பதியமிட்ட செடியாக எழுதத்தொடங்குங்கள்
நாளைய இலக்கியசோலையின் நாயகர்கள் நீவிரே !