நட்பென்றாலே

நட்பென்றாலே உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு உயிர்காக்கும்...

Continue reading

நட்பென்றாலே

ராணி சம்பந்தர் பரிதவிக்கும் நேரம் புரிந்துணர்வுடனே கை கொடுப்பாரே உறங்க மறுத்த விழியை ஊக்கமிட்டு உரமூட்டித் தாகந் தீர்க்கும் தோழரே நடமாடும் மனிதர்...

Continue reading

இயல்புணர்ந்து இசைந்தெழுவோம்

இரா.விஜயகௌரி
கைகட்டி வாய் பொத்தி
வைத்ததெல்லாம் சட்டமென்று
வரம்பினுள்ளே சிறைப்பறவை
எதிர்கூறல் எதுவுமின்றி மௌனமொழி

ஆம் தாயகத்து வாழ்முறையில்
விழி பேசும் பல சட்டம்
விதி வரையும் சில சட்டம்
வெந்தெழுதும் மௌனத்துள் சட்டங்கள்

புலம் பெயர்வில் பன் மொழியுள்
பல்லின மக்களிடை நிதம் கலந்து
நாமிட்ட இருள் கதவை உடைத்தெழுந்து
நமக்கே உணர வைக்கும் மானுடத்தேடல்

சரியெது பிழையெது விட்டது தொட்டதேது
காலம் விரைவெனக் கடக்கிறது அதனால்
வாழ்வியல் சூழலும் வாழ்நடை மொழிதலும்
இங்கித புரிதலும் தோளணைக்க நம்

இளையோரை நமக்குள் இசைந்தசைய
விட்டும் கொடுத்தும் வெல்வோமா அன்பினால்

Nada Mohan
Author: Nada Mohan