நட்பென்றாலே

நட்பென்றாலே உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு உயிர்காக்கும்...

Continue reading

நட்பென்றாலே

ராணி சம்பந்தர் பரிதவிக்கும் நேரம் புரிந்துணர்வுடனே கை கொடுப்பாரே உறங்க மறுத்த விழியை ஊக்கமிட்டு உரமூட்டித் தாகந் தீர்க்கும் தோழரே நடமாடும் மனிதர்...

Continue reading

வலிகள்

ராணி சம்பந்தர்

வலிகள்
கோடை காலம் வந்தும்
வாடைக்காற்றோ அதி
வேகமாகிட கூடவரும்
குளிர் மழைக்கூதலும்
சாடையாகப் பனிக்கல்
சேரக் கொட்டிக் கொட்டிப்
பசி தீர்க்கிறது

இடையிடையே ஒளிதரும்
கதாநாயகன் உதயசூரியன்
தானுமுண்டென கண்கள்
கூசிட உத்துப் பார்க்கிறது

விடுமுறை செல்லும் மாந்தர்
நெடுஞ்சாலைப் பிரயாணம்
நீண்ட தூரம் அதிவேகமும் ,
கழைப்பிலும் மோதிடும்
விபத்துகளின் விபரீதம்

எத்தனை கனவோடு மகிழ்வு
சற்று முன்பு அசைபோடவே
அத்தனையும் ஒரு நொடியில்
அற்றுப்போய் குற்றுயிராய்ச்
சிதறி உதிரம் பாய இறக்கும்
பிணங்களில் மாறா வலிகள் .

Nada Mohan
Author: Nada Mohan