ஆக்கங்களின் பிறப்பிடம்

எழுத்தாளர் கரம் தொட்டு
உருவாகும் ஓர் ஆக்கம்
ஆண்டுகள் பல கடந்தும் தீரவில்லை ஊக்கம்
சிந்தனையை சிறகாக்கி சிகரங்களை கண்டார்கள்
பூக்களாய் மலர்ந்தவர்கள் புதுமையின் மணம் வீசிக்கொண்டார்கள்

எண்ணற்ற படைப்புக்களை படைப்பதற்கு கிடைத்தது ஒரு தளம்
விதைக்க விதைக்க தொடர் விளைச்சலை தந்தது பாமுக நிலம்
காலங்கள் கடந்து ஆண்டு இருபத்தொன்பதை தொட்டது இன்று
எழுத்து வாழும்வரை அழிவதில்லை எண்ணங்கள் என்று
ஆகவே எழுதிய காரங்கள் ஓயாது எழுதட்டும்
அறிவையும் அன்பையும் தந்து அழியாப் புகழை சேர்க்கட்டும்

ஜெயம்
11-06-2026

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

Continue reading